×

ஈரோட்டில் இன்று மாலை நடக்கிறது தமாகா பொதுக்கூட்டத்தில் திரளாக பங்கேற்க வேண்டும்: கலை அணி தலைவர் ஜே.எஸ்.கே.சதீஷ் குமார் அழைப்பு

சென்னை: ஈரோட்டில் இன்று மாலை ஜி.கே.வாசன் தலைமையில் நடைபெறும் தமாகா பொதுக்கூட்டத்தில் திரளாக பங்கேற்கும்படி கலை அணி தலைவர் ஜே.எஸ்.கே.சதீஷ் குமார் அழைப்பு விடுத்துள்ளார். திரைப்பட தயாரிப்பாளரும், நடிகரும், தமாகா மாநில கலை அணியின் தலைவருமான ஜே.எஸ்.கே.சதீஷ் குமார் வெளியிட்ட அறிக்கை: காமராஜரின் 120வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட உள்ளது. 1930ல் நடந்த உப்பு சத்தியாகிரக போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றார். தொடர்ந்து அரசியல் பணியில் ஈடுபட்டு வந்தார். 1954ல் குடியாத்தம் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற காமராஜர், தமிழ்நாடு முதல்வராக பொறுப்பேற்றார். ஏழை மாணவர்கள் பள்ளிகளில் கல்வி கற்பதற்கு இலவச மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார்.

தமிழ்நாட்டில் பள்ளிகள் இல்லாத ஊரே இருக்கக்கூடாது என்ற நோக்கத்தில் கல்வி வளர்ச்சிக்கு அரும்பெரும் தொண்டாற்றினார். தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் அணைகள் கட்டி விவசாயத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தினார். தான் வாழ்ந்த 73 ஆண்டுகளில் 57 ஆண்டுகள் தமிழ்நாட்டு மக்களுக்காக தன்னை அர்ப்பணித்த ஒப்பற்றத் தலைவராக விளங்கினார். வாய்மை, தூய்மை, நேர்மை, எளிமை, அடக்கம் ஆகியவற்றுக்கு உதாரணமாக திகழ்ந்தார் காமராஜர். காமராஜர் வழியில் வாழும் காமராஜரான த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் ஈரோட்டில் இன்று மாலை 4 மணிக்கு மாபெரும் பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post ஈரோட்டில் இன்று மாலை நடக்கிறது தமாகா பொதுக்கூட்டத்தில் திரளாக பங்கேற்க வேண்டும்: கலை அணி தலைவர் ஜே.எஸ்.கே.சதீஷ் குமார் அழைப்பு appeared first on Dinakaran.

Tags : Erot ,Tamaga ,J.J. S.S. K.K. Sadeesh Kumar ,Chennai ,Erode ,G. K.K. ,J.J. J.M. ,Vasan. S.S. K.K. Sadish ,Erote ,J.J. S.S. K.K. Satish Kumar ,Dinakaran ,
× RELATED ஸ்ரீபெரும்புதூர் தமாகா வேட்பாளரை...