×

சந்திரயான் 3 விண்கலம் ஏவப்படுவதால் பழவேற்காடு மீனவர்கள் மீன்பிடிக்க தடை

சென்னை :ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திராயன் 3 விண்கலம் இன்று ஏவப்படுவதால் பழவேற்காடு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ராக்கெட் ஏவப்பட உள்ளதால் அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் குறிப்பிட்ட கடல் பகுதிகளுக்குள் மீனவர்கள் தொழிலுக்கு செல்லக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி இன்று பழவேற்காடு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று மீன்வள கூட்டுறவு சங்கங்கள் மூலம் மீன்வளத்துறையினர் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

The post சந்திரயான் 3 விண்கலம் ஏவப்படுவதால் பழவேற்காடு மீனவர்கள் மீன்பிடிக்க தடை appeared first on Dinakaran.

Tags : Palavekkad ,Chennai ,Sriharikota, Andhra Pradesh ,
× RELATED 509 ஆண்டுகள் பழமையான புனித மகிமை மாதா திருத்தல பெருவிழா