×

பட்டா கத்தியுடன் மிரட்டிய போதை ஆசாமி கைது

தவளக்குப்பம், ஜூலை 14: புதுச்சேரி அரியாங்குப்பம் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட சண்முகாநகர், சிங்காரவேலர் வீதி வழியே செல்லும் பொதுமக்களை 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் மது குடித்துவிட்டு போதையில் பட்டாக் கத்தியுடன் தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்து வந்தார். இதுபற்றி தகவலறிந்த அரியாங்குப்பம் சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் தலைமையிலான போலீசார், அங்கு விரைந்து சென்று அந்த நபரை மடக்கிப் பிடித்தனர். விசாரணையில் அவர் அரியாங்குப்பம் சண்முகாநகர் சிங்காரவேலர் வீதியைச் சேர்ந்த அருண் (எ) அந்தோணிசாமி என தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து ஒரு பட்டாக் கத்தி, செல்போனை போலீசார் கைப்பற்றினர்.

The post பட்டா கத்தியுடன் மிரட்டிய போதை ஆசாமி கைது appeared first on Dinakaran.

Tags : Asami ,Dawawakupam ,Puducherry Ariyangupam ,Puducherry ,Ariyangupam ,Singaravelar Road ,Sankaravelar Road ,
× RELATED திருடர்கள் புகுந்த நிலையில் மீண்டும்...