×

21ம் தேதி தேரோட்டம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில்

 

திருவாரூர், ஜூலை 14: திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாரு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்படவுள்ள தொகுதி 1 முதல் தொகுதி 4ற்குட்பட்ட காலிபணியிடங்களான துணைஆட்சியர் முதல் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் உள்ளிட்ட அனைத்து பணியிடங்களுக்குமான எழுத்துத்தேர்விற்கான கட்டணமில்லாமல் ஒருங்கிணைந்த பயிற்சி வகுப்பு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் மூலமாக கடந்த 7ம் தேதி முதல் இலவச பயிற்சி வகுப்புகள் துவங்கி நடைபெற்று வருகிறது. இத்தேர்வுகளில் தொகுதி 1 மற்றும் தொகுதி 2 தேர்வுகளுக்கு ஏதேனும் ஒருபட்டப்படிப்பும், தொகுதி 4 தேர்விற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சியும் கல்வித்தகுதியாகும். இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது ஆதார் அட்டையின் நகல் மற்றும் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களுடன் திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுகி பயன்பெறலாம்.

மேலும், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள காவல் உதவி ஆய்வாளர், 2ம் நிலை காவலர் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு, வார இறுதி நாட்களில் மாதிரி தேர்வுகளும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடத்தப்பட்டுவருகிறது. எனவே, திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த டி.என்.பி.எஸ்.சி மற்றும் டி.என்.யு.எஸ்.ஆர்.பி. தேர்வுகளுக்கு தயாராகிவரும் தகுதியும், ஆர்வமும் உள்ள இளைஞர்கள் இக்கட்டணமில்லா பயிற்சி வகுப்புகளை விளமல், மன்னார்குடி சாலை, திருவாரூர் என்ற முகவரியில் செயல்பட்டு வரும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழி காட்டும் மையத்தை நேரில் அணுகி பயன்பெறலாம். மேலும் தகவலுக்கு 04366-224226 என்ற தொலைபேசி எண்ணையோ அல்லது thiruvarurstudycircle@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியையோ தொடர்புகொள்ளலாம்.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

The post 21ம் தேதி தேரோட்டம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் appeared first on Dinakaran.

Tags : Therottam District Employment Office ,Tiruvarur ,Tiruvarur District ,Collector ,Charu ,Tamil ,Nadu ,Dinakaran ,
× RELATED திருவாரூர் அருகே போலீசார் அதிரடி