×

வீட்டை உடைத்து 15 சவரன் திருடியவர் கைது

தாம்பரம்: தாம்பரம் அடுத்த மப்பேடு, புத்தூர் பகுதியை சேர்ந்தவர் கஜேந்திரன் (64). இவர், கடந்த மாதம் 26ம்தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் ஆந்திரா மாநிலத்தில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் கடந்த 11ம்தேதி வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த தங்க செயின், மோதிரம், கம்மல் என 15 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

இதனால், அதிர்ச்சியடைந்த கஜேந்திரன், இதுகுறித்து சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து நடத்திய விசாரணையில், மேடவாக்கம் பகுதி சேர்ந்த திருமால் (40) என்பவரை போலீசார், கைது செய்து சிறையில் அடைத்தனர்.

The post வீட்டை உடைத்து 15 சவரன் திருடியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Dambaram ,Kajendran ,Puttur ,Mapaped ,Mdhethi house ,Dinakaran ,
× RELATED கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை