×

ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் 3 புதிய மின்மாற்றிகள்: எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிகளில், ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்ட 3 மின் மாற்றிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக எழிலரசன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார். காஞ்சிபுரம் மாநகராட்சி செவிலிமேடு, ஒலிமுகமதுபேட்டை, திருவள்ளுவர் தெரு உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி குறைந்த மின்னழுத்தம் ஏற்பட்டு, சீரான மின்சாரம் பெற முடியாமல் பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வந்தனர். இதனையறிந்த, காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன், செவிலிமேடு, ஒலிமுகமதுபேட்டை, திருவள்ளுவர் தெரு ஆகிய பகுதிகளில் மின்னழுத்தம் எற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மின்வாரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதன்படி, காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 43வது வார்டு செவிலிமேடு குமரகோட்டம் நகர், 23வது வார்டு திருவள்ளுவர் நகர் ஆகிய பகுதிகளில் 100 கேவிஏ திறன் கொண்ட மின்மாற்றிகள் மற்றும் 1வது வார்டு ஒலிமுகமதுபேட்டை பகுதியில் 63கேவிஏ திறன் கொண்ட மின்மாற்றி என ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக 3 மின்மாற்றிகள் அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது.

இதில், காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் கலந்துகொண்டு ரூ.15 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட 3 புதிய மின்மாற்றிகளை தொடங்கி வைத்தார். இந்நிழ்ச்சியில், மேயர் மகாலட்சுமி யுவராஜ், மாவட்ட பொருளாளர் ஆறுமுகம், மாநகர செயலாளர் தமிழ்ச்செல்வன், மண்டல குழு தலைவர் செவிலிமேடு மோகன், பகுதி செயலாளர் சந்துரு தசரதன், திலகர் வெங்கடேசன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் யுவராஜ், நிர்வாகிகள் ஜெகநாதன், குமரேசன், குடியரசு, மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் 3 புதிய மின்மாற்றிகள்: எம்எல்ஏ தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : MLA ,Kanchipuram ,Kanchipuram Municipal Corporation ,Ehilarasan ,
× RELATED மதுராந்தகத்தில் திமுக சார்பில் தண்ணீர் பந்தல்: எம்எல்ஏ திறந்து வைத்தார்