×

மதுவிலக்கு குறித்து பொது வாக்கெடுப்பு நடத்த தயாரா? அரசுக்கு ராமதாஸ் கேள்வி

சென்னை: மதுவிலக்கு குறித்து பொது வாக்கெடுப்பு நடத்த தயாரா என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தமிழ்நாடு அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: மதுவின் பயன்பாட்டால் தமிழகத்தின் மாநில ஓட்டுமொத்த உற்பத்தி மதிப்பு எந்த அளவுக்கு குறைகிறது? என்பன உள்ளிட்ட விடை காணப்பட வேண்டிய வினாக்கள் ஏராளமாக உள்ளன. அது குறித்து ஆய்வுகளை நடத்தி, அவற்றின் அடிப்படையில் மதுவிலக்குக் கொள்கையை வகுக்கலாம்.தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவது குறித்து தமிழ்நாட்டு மக்களிடம் பொதுவாக்கெடுப்பை நடத்தி, அதன் முடிவுகளை செயல்படுத்துவது தான் தமிழ்நாட்டுக்கு செய்யும் நன்மை. அதற்கு அரசு தயாரா. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post மதுவிலக்கு குறித்து பொது வாக்கெடுப்பு நடத்த தயாரா? அரசுக்கு ராமதாஸ் கேள்வி appeared first on Dinakaran.

Tags : Ramadoss ,Govt. ,CHENNAI ,BJP ,Founder ,Tamil Nadu government ,Dinakaran ,
× RELATED விக்கிரவாண்டி இடைத்தேர்தலை வெப்பம்...