×

பிரேசில் மதுபான விடுதியில் துப்பாக்கி சூடு; 4 பேர் பலி

சாவ் பாலோ: பிரேசிலின் சாவ் பாலோவில் பார்க் பாரைசோ என்ற நகரம் உள்ளது. அங்கு ஒரு நட்சத்திர மதுபான விடுதியில் நள்ளிரவில் ஏராளமானோர் மது குடித்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு பைக்கில் மர்ம கும்பல் வந்தது. திபுதிபுவென விடுதிக்குள் புகுந்து, தாங்கள் மறைந்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சரமாரி சுட்டனர். உடனே மது அருந்தி கொண்டிருந்தவர்கள் பீதியில் சிதறி ஓடினர். சிறிது நேரத்தில், தாக்குதலை நடத்திவிட்டு மர்ம கும்பல் தப்பி ஓடியது. தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

இந்த திடீர் தாக்குதலில் விடுதிக்குள் இருந்த 4 பேர் உடலில் குண்டு பாய்ந்து ரத்தவெள்ளத்தில் இறந்து கிடந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்தவர்கள் அதே பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், சாவ் பாலோ நகரில் பயங்கரவாத செயல்களில் செயல்படும் இரு கும்பலுக்கு இடையே உள்ள முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்ததாக தெரியவந்துள்ளது. போலீசார் வழக்குப்பதிவு செய்து துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பி ஓடிய மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகிறார்கள்.

The post பிரேசில் மதுபான விடுதியில் துப்பாக்கி சூடு; 4 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Brazil ,Sao Paulo ,Sao Paulo, Brazil ,Park Baraiso ,
× RELATED ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஈக்வடார்...