×

முதியவர் தற்கொலை

போடி, ஜூலை 13: போடி அருகே உள்ள மீனாட்சிபுரம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் முத்தையா (65). கூலித்தொழிலாளியான இவர், ஆஸ்துமா நோய் அவதிப்பட்டு வந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் நோய் குணமடையவில்லை. இதனால் மனவருத்தத்தில் இருந்த அவர், கடந்த 5ம் தேதி வீட்டில் எலி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

ஆபாத்தான நிலையில் அவரை உறவினர்கள் மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த முத்தையா நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போடி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post முதியவர் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Bodi ,Muthiah ,Mariamman Koil Street, Meenakshipuram ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை