×

திருக்காட்டுப்பள்ளி அருகே கொள்ளிடம் ஆற்றில் கட்டப்பட்டது பயன்பாட்டிற்கு வருவதற்குள் சரிந்து விழுந்த படித்துறை

 

திருக்காட்டுப்பள்ளி, ஜூலை 13: திருக்காட்டுப்பள்ளி அருகே சுக்காம்பார் கொள்ளிடம் ஆற்றில் கட்டி முடித்த படித்துறை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வருவதற்குள் சேதம் அடைந்தது. அந்த படித்துறையை அப்புறப்படுத்தி விட்டு புதிதாக கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். திருக்காட்டுப் பள்ளி-கல்லணை சாலையில் கோவிலடி ஊராட்சிக்குட்பட்ட சுக்காம்பார் கிராமம் உள்ளது. காவிரி ஆறு-கொள்ளிடம் ஆற்றுக்கு இடைபட்ட பகுதியில் இந்த கிராமம் உள்ளது. சுமார் 200 குடும்பங்கள் வசித்து வரும் இவ்வூரில் உள்ள பொதுமக்கள் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில்தான் குளித்து வருகின்றனர்.

கொள்ளிடம் ஆற்றின் மேற்கு பகுதியில் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக கட்டப்பட்ட படித்துறை உள்ளது. இப்படித்துறையில் மேலத்தெருவை சேர்ந்த பொதுமக்கள் குளிக்க பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் கீழ தெரு பொதுமக்கள் குளிப்பதற்குபடித்துறை இல்லாமல் பல வருடங்களாக சிரமப்பட்டு வந்தனர். இவர்களுக்கென்று படித்துறை கட்ட ஏற்பாடு செய்யப்பட்டு படித்துறை கோவிலடி ஊராட்சி மூலம் கட்டப்பட்டது. அந்த படித்துறை கொள்ளிடம் ஆற்றினுள் கட்டப்பட்டது. கொள்ளிடக்கரையில் இருந்து சுமார் 50 மீட்டர் தூரத்தில் இருக்கும் ஆற்றுக்குள் இருப்பதாலும் அப்பகுதி மணலால் சூழப்பட்டிருப்பதாலும் கடந்த ஆறு மாதத்திற்கு முன்வந்த வெள்ளநீரில் படித்துறை மணலில் தலைக்குப்புற விழுந்து விட்டது.

இதனால் அந்த படித்துறையை பொதுமக்கள் பயன்படுத்த முடியாமல் உள்ளது. மேலும் இந்த இடத்தில் படித்துறை கட்டப்பட்டதால் பொதுமக்கள் யாரும் ஆற்றினுள் இறங்க முடியாமல் இடத்தை அடைத்துள்ளது. பொதுமக்கள் அந்த இடத்தில் படித்துறை கட்டவேண்டாம் என கேட்டுக்கொண்டதாகவும் கரையிலிருந்து கான்கிரீட் சாய்வுதளம் அமைத்து கரையில் படித்துறை அமைத்துக் கொடுத்தால் அனைத்து மக்கள், வயதானவர்கள் கூட இறங்கி சென்று குளிக்க முடியும் என தெரிவித்திருந்தும் அலட்சிய போக்கில் ஆற்றுக்குள் கட்டப்பட்டதால் தான் அந்தப் படித்துறை மணல் அறிப்பால்ஆற்றுக்குள் சாய்ந்து விட்டது. என அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.மேலும் அந்த படித்துறையை அப்புறப்படுத்தி விட்டு புதிய படித்துறை அமைத்து தர வேண்டும் என்று தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகத்தை சுக்காம்பார் பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

The post திருக்காட்டுப்பள்ளி அருகே கொள்ளிடம் ஆற்றில் கட்டப்பட்டது பயன்பாட்டிற்கு வருவதற்குள் சரிந்து விழுந்த படித்துறை appeared first on Dinakaran.

Tags : Tirukkatupalli ,Tirukkattupalli ,Puddha ,Sukkambar Ruthi ,Tirukukuthupalli ,Dinakaran ,
× RELATED திருக்காட்டுப்பள்ளியில் போலீசார் கொடி அணிவகுப்பு பேரணி