×

கொல்லிமலை அன்னாசி பழங்கள் கூவிகூவி விற்பனை ஆர்வமுடன் வாங்கி சென்ற பொதுமக்கள் திருவண்ணாமலையில் சாலையோரம்

திருவண்ணாமலை, ஜூலை 13: திருவண்ணாமலையில் அன்னாசி பழம் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளன. 3 பழங்கள் ₹100க்கு கூவிகூவி விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அன்னாசி பழம் அதிக அளவில் தேனி, திண்டுக்கல், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் விளைகிறது. தற்போது, நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் அன்னாசி விளைச்சல் அதிகரித்திருப்பதால், விைல வீழ்ச்சியடைந்திருக்கிறது. எனவே, கொல்லிமலை பகுதியில் இருந்து லாரிகள் மூலம் கொண்டு வரப்படும் அன்னாசி பழங்கள் திருவண்ணாமலை நகரின் பல்வேறு பகுதிகளில் சாலையோரம் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளன. முதல் தரம் அன்னாசி 2 பழங்கள் ₹100க்கும், இரண்டாம் தரம் அன்னாசி 3 பழங்கள் ₹100க்கும் கூவிகூவி விற்பனை செய்யப்படுகிறது. நன்றாக கனித்து, வாசம் வீசும் அன்னாசி பழங்களை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். தக்காளி பழம் கிலோ ₹100 முதல் ₹140 வரை விற்கப்படும் நிலையில், 2 மற்றும் 3 அன்னாசி பழங்கள் ₹100க்கு சாலையோரம் கூவிகூவி விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post கொல்லிமலை அன்னாசி பழங்கள் கூவிகூவி விற்பனை ஆர்வமுடன் வாங்கி சென்ற பொதுமக்கள் திருவண்ணாமலையில் சாலையோரம் appeared first on Dinakaran.

Tags : Tiruvannamalai ,
× RELATED திருவண்ணாமலை மாவட்டத்தில் மாணவியிடம் ஆபாசமாக பேசிய ஆசிரியர் கைது