×

சர்வேயர்கள், டிராப்ட்மேன்களுக்கு பணி நியமன ஆணை: வருவாய் துறை அமைச்சர் வழங்கினார்

சென்னை: சர்வேயர்களுக்கு பணி நியமன ஆணையை வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் வழங்கினார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, நிலஅளவை மற்றும் நிலவரி திட்ட துறைக்கு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் தொகுதி-IV போட்டி தேர்வு நடத்தப்பட்டு, தேர்வாகி உள்ள 151 சர்வேயர்கள் மற்றும் டிராப்ட்மேன்களுக்கு, பணி நியமன ஆணை வழங்கும் விழா இயக்குநர், நிலஅளவை மற்றும் நிலவரித்திட்டம், சர்வே இல்லம், சென்னை கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது.

இந்த விழாவில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கலந்து கொண்டு பணி நியமன ஆணைகளை பணியாளர்களுக்கு வழங்கினார். இவ்விழாவில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை செயலாளர் குமார் ஜெயந்த், வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர், நில நிர்வாக ஆணையர் எஸ்.நாகராஜன், நிலஅளவை மற்றும் நிலவரித்திட்ட இயக்குநர் மதுசூதன் ரெட்டி மற்றும் நிலஅளவை பதிவேடுகள் துறை, கூடுதல் இயக்குநர் (பொ) கண்ணபிரான், இணை இயக்குநர்கள், மண்டல துணை இயக்குநர் மற்றும் உதவி இயக்குநர்கள் கலந்து கொண்டனர்.

The post சர்வேயர்கள், டிராப்ட்மேன்களுக்கு பணி நியமன ஆணை: வருவாய் துறை அமைச்சர் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,K.K.S.S.R. ,Ramachandran ,Department of Revenue and Disaster Management ,Minister ,Revenue ,Dinakaran ,
× RELATED அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்....