சென்னை: தகவல் தொழில்நுட்பத்துறையில் மிகப்பெரிய நிறுவனமான டி.சி.எஸ். 2023-ஏப்.-ஜூன் காலாண்டில் ரூ.11,074 கோடி நிகர லாபம் பெற்றுள்ளது. 2022 ஏப்.ஜூன் காலாண்டின் நிகர லாபமான ரூ.9,478 கோடியைவிட இவ்வாண்டு நிகரலாபம் 16.8% அதிகரித்துள்ளதாகவும், 2022 ஏப்.-ஜூன் காலாண்டில் ரூ.52,758 கோடியாக இருந்த டிசிஎஸ்ஸின் வருமானம் தற்போது 12.5% அதிகரித்து ரூ.59,381-வும், 2023 ஜூன் 30-ம் தேதி நிலவரப்படி டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தில் 6,15,318 பேர் பணிபுரிவதாக நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
The post தகவல் தொழில்நுட்பத்துறையில் மிகப்பெரிய நிறுவனமான டி.சி.எஸ் முதல் காலாண்டு லாபம் ரூ.11,074 கோடி..!! appeared first on Dinakaran.