×

தண்ணீர் வரத்து அதிகரிப்பு இன்று முதல் மீண்டும் கவியருவி திறப்பு

*அதிகாரிகள் தகவல்

பொள்ளாச்சி : பொள்ளாச்சியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பருவமழையால், கவியருவிக்கு தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரிக்க துவங்கியுள்ளதால் இன்று முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிப்பதாக வனத்துறையினர் தெரிவித்தனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி- வால்பாறை சாலையில் உள்ள கவியருவில் கடந்த ஆண்டில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை அடுத்தடுத்து பெய்ததால் ஜனவரி இறுதி வரையிலும் தண்ணீர் வரத்து தொடர்ந்திருந்தது.

வெயிலின் தாக்கம் அதிகரித்து வறட்சியால் கவியருவியில் தண்ணீர் வரத்தின்றி பாறையானதால், ஜனவரி 28ம் தேதி முதல் கவியருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
கடந்த சில மாதமாக அங்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்தில் திரும்பி சென்றனர். கோடை மழை சில நாட்கள் பெய்தபோது, அந்நேரத்தில் குறிப்பிட்ட நாட்கள் தண்ணீர் வரத்து அதிகரித்ததுடன், ஓரிரு நாளில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது.

அதன்பின் வெயிலின் தாக்கம் அதிகரித்து, தண்ணீர் வரத்து சொற்ப அளவிலே இருந்தது. இந்நிலையில் கடந்த 2 வாரத்துக்கு மேலாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த பருவ மழையால், கடந்த 5ம் தேதி அதிகாலையில் கவியருவியில் தண்ணீர் வரத்து அதிகமானது. சில நாட்களில் காட்டாற்று வெள்ளபோல் ஆனது. இந்நிலையில், தற்போது மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை குறைந்ததுடன், அருவியில் கொட்டும் தண்ணீரின் அளவும் குறைய துவங்கி ரம்மியமாக உள்ளது. இதையடுத்து, சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்க வனத்துறை நடவடிக்கை மேற்கொண்டது.

இந்நிலையில், சுமார் 5 மாதத்திற்கு பிறகு கவியருவியில் குளிப்பதற்கான தடை நீக்கப்பட்டு, இன்று 12ம் தேதி முதல் கவியருவியில் சுற்றுலா பணிகள் குளிக்க அனுமதிக்கப்படவுள்ளன. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

The post தண்ணீர் வரத்து அதிகரிப்பு இன்று முதல் மீண்டும் கவியருவி திறப்பு appeared first on Dinakaran.

Tags : Pollachi ,Poullachi ,Kaviyaruwi ,Dinakaran ,
× RELATED வீடுகளில் விரிசல்; பொள்ளாச்சியில் கல்...