×

அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

 

ஈரோடு, ஜூலை 11: ஈரோட்டில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஈரோடு, நகர்புற சி.டி.பி.ஓ. அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் மணிமாலை தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். மேற்பார்வையாளர்கள் பதவி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும்.

ஊழியர்கள் இல்லாத அங்கன்வாடி மையங்களை ஒன்றுடன் ஒன்று இணைக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும். அரசு பெண் ஊழியர்களுக்கு வழங்குவதைபோல அங்கன்வாடி பெண் ஊழியர்களுக்கும் மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என்பது உள்பட கோரிக்கை வலியுறுத்தப்பட்டன. இதில், திரளான அங்கன்வாடி ஊழியர்கள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.

The post அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Anganwadi ,Erode ,Tamil Nadu Anganwadi Workers and Helpers Association ,Dinakaran ,
× RELATED கடும் வெப்பம் காரணமாக டெல்லியில் ஜூன் 30 வரை அங்கன்வாடிகள் மூட உத்தரவு