×

கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படை அமைப்பு

 

ஓசூர், ஜூலை 11: ஓசூரில் விவசாயியை வெட்டி கொன்ற கொலையாளிகளை பிடிக்க, 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தீவிரமாக தேடி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த ஜூஜூவாடியைச் சேர்ந்தவர் விவசாயி சிவராமப்பா(50). இவர் கால்நடைகள் வளர்த்து, பால் வியாபாரமும் செய்து வந்தார். கடந்த 3 தினங்களுக்கு முன், சிவராமப்பா புல்லை அறுத்து காரில் எடுத்துக்கொண்டு ரோஸ் கார்டன் அருகே வந்த போது, டூவீலரில் மூகமூடி அணிந்து வந்த மர்மநபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இதுபற்றி சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கொலையாளிகளை பிடிக்க டவுன் இன்ஸ்பெக்டர் சிவகுமார், சிப்காட் எஸ்ஐ பட்டு, பாகலூர் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் பெங்களூரு, சந்தாபுரம், சப்தாபுரம் என மாநில எல்லையில் முகாமிட்டு கொலையாளிகளை தேடி வருகின்றனர். நேற்று முன்தினம் பிடிபட்ட 2 பேரிடம், தொடர்ந்து நேற்றும் விசாரணை நடத்தப்பட்டது.

The post கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படை அமைப்பு appeared first on Dinakaran.

Tags : Hosur ,Dinakaran ,
× RELATED சிறுமியை துரத்தி துரத்தி கடித்த தெருநாய்கள்