×

தேவாரம் ஒப்புவித்தல் போட்டி

 

சிவகங்கை, ஜூலை 11: சிவகங்கை அரசு இசைப்பள்ளியில் தேவாரம், திருவாசகம் ஒப்புவித்தல் போட்டி நடக்க உள்ளது. மாவட்ட அரசு இசைப்பள்ளி சார்பில் தெரிவித்துள்ளதாவது: சிவகங்கை மாவட்ட அரசு இசைப்பள்ளி மற்றும் திருநாவுக்கரசர் இசை ஆராய்ச்சி இசைக்கல்வி அறக்கட்டளை சார்பில் பள்ளி மாணவர்களுக்கான தேவாரம், திருவாசகம் ஒப்புவித்தல் போட்டி ஜூலை 21அன்று காலை 10மணிக்கு, சிவகங்கை அரசு இசைப்பள்ளியில் நடக்க உள்ளது.

6 மற்றும் 7ம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புவனம், காளையார்கோவில் தேவாரப் பதிகங்கள், 8மற்றும் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்பத்தூர், பிரான்மலை தேவாரப் பதிகங்கள் மற்றும் சிவபுராணத்தில் போட்டிகள் நடைபெறும். ஒவ்வொரு பள்ளிக்கும் 8 முதல் 10 மாணவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவர். கூடுதல் தகவல் அறிய 94439 30540 என்ற செல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தேவாரம் ஒப்புவித்தல் போட்டி appeared first on Dinakaran.

Tags : Devaram Appreciation Competition ,Sivagangai ,Devaram ,Thiruvasakam ,Sivagangai Government School of ,Music ,Dinakaran ,
× RELATED கோடைகால பயிற்சி முகாம் இன்று துவக்கம்