×

கிணற்றில் தவறி விழுந்து முதியவர் பலி

 

கடத்தூர், ஜூலை 10: கடத்துார் அடுத்த வேப்பிலைப்பட்டியைச் சேர்ந்தவர் சின்னையன்(82). இவர், நேற்று முன்தினம் அதிகாலை, வெளியில் சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் நேற்று காலை 8.30 மணிக்கு, அப்பகுதியில் உள்ள சின்னபாப்பா என்பவரது விவசாய கிணற்றில் இறந்து கிடந்தார். கடத்தூர் போலீசார் உடலை மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் சின்னையன் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தது தெரிய வந்தது. இது குறித்து கடத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post கிணற்றில் தவறி விழுந்து முதியவர் பலி appeared first on Dinakaran.

Tags : Kadathur ,Channaiyan ,
× RELATED கலை நிகழ்ச்சிகள் மூலம் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு