×

மயிலாடுதுறை சாரங்கபாணி மேம்பாலம் பராமரிப்பு வீடுகளை காலி செய்ய பொதுப்பணித்துறை அறிவிப்புக்கு எதிர்ப்பு: வீடுகளில் கருப்புகொடி கட்டினர்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை சாரங்கபாணி மேம்பாலம் பராமரிப்பு பணிக்காக வீடுகளை காலி செய்ய பொதுப்பணித்துறையின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியினர் வீடுகளில் கருப்பு கொடி கட்டினர். மயிலாடுதுறையில் சாரங்கபாணி மேம்பாலம் பராமரிப்பு பணிக்காக வீடுகளை காலி செய்ய சொல்லி நெடுஞ்சாலைத்துறையினர் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வீடுகளில் கருப்பு கொடி கட்டினர். மயிலாடுதுறை ரயில் நிலையம் அருகில் சித்தர்காடு பகுதியில் தியாகி சாரங்கபாணி நினைவு மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்ள நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டுள்ளது. இதையடுத்து, கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக இப்பாலத்தின்கீழ் சந்தைப்பேட்டை தெருவில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடம் மற்றும் புறம்போக்கு இடத்தில் குடியிருந்து வரும் 65 குடியிருப்புவாசிகளின் வீடுகளை இடிக்க உள்ளதால், அவர்களின் வீடுகளை காலி செய்யும்படி நெடுஞ்சாலைத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, இங்கு தங்கியுள்ள அன்றாட கூலி வேலைக்கு செல்லும் மக்கள் தங்களுக்கு செல்வதற்கு வேறு இடம் இல்லை என்பதால், அதே இடத்தில் தங்கியிருக்க அனுமதிக்க வேண்டும். அல்லது அரசு தங்களுக்கு மாற்று இடம் ஏற்பாடு செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து, 100-க்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து கோரிக்கை மனு அளித்தனர். இந்நிலையில் நேற்று அப்பகுதி மக்கள் நெடுஞ்சாலை துறையின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தங்கள் வீடுகளின் முன்பு கருப்புக்கொடி கட்டி கண்டனம் தெரிவித்தனர்.

The post மயிலாடுதுறை சாரங்கபாணி மேம்பாலம் பராமரிப்பு வீடுகளை காலி செய்ய பொதுப்பணித்துறை அறிவிப்புக்கு எதிர்ப்பு: வீடுகளில் கருப்புகொடி கட்டினர் appeared first on Dinakaran.

Tags : Mayiladuthurai ,Sarangapani ,PWD ,Public Works Department ,
× RELATED கோடை காலத்தில் தகுந்த நேரத்தில்...