×

ஈரானில் காவல்நிலையம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்: 4 தீவிரவாதிகள் சுட்டு கொலை

தெஹ்ரான்: தென்கிழக்கு ஈரானில் காவல் நிலையம் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் 4 பேர் சுட்டு கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் எல்லையில் இருந்து சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தென்கிழக்கு ஈரானில் சிஸ்தான், மற்றும் பலுசிஸ்தான் மாகாணத்தின் சஹேடானில் காவல் நிலையங்கள் உள்ளன. இந்த காவல் நிலையங்கள் மீது ஆயுதம் தாங்கிய தீவிரவாதிகள் 4 பேர் பயங்கர தாக்குதல் நடத்தினர்.

அப்போது காவல் துறையினர் மீது கையெறி குண்டுகளை வீசி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் காவல்துறை அதிகாரிகள் 2 பேர் சுட்டு கொல்லப்பட்டனர். பதிலுக்கு காவல்துறை நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர்.

The post ஈரானில் காவல்நிலையம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்: 4 தீவிரவாதிகள் சுட்டு கொலை appeared first on Dinakaran.

Tags : Tehran ,southeast Iran ,Pakistan ,Iran ,Dinakaran ,
× RELATED ஈரானில் போர் பதற்றம் நிலவும் நிலையில்,...