×

புதுகை தொழிலதிபரிடம் ரூ.60 லட்சம் வாங்கி மோசடி பாஜ நிர்வாகி மீது வழக்கு

ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே இனாம்கிராமத்தை சேர்ந்தவர் சாகுல்ஹமீது (49). கார் வாங்கி விற்பனை செய்து வரும் இவர், திருச்சி சரக டிஐஜி சரவணசுந்தரிடம் கொடுத்த புகார் மனுவில், புதுக்கோட்டை சார்லஸ் நகரில் வசிக்கும் புதுக்கோட்டை மேற்கு மாவட்ட பாஜ பொருளாளர் முருகானந்தம், தொழில் செய்வதற்காக கடந்த 2017ல், 2 தவணையாக ரூ.60லட்சம் கடன் வாங்கினார். பலமுறை கேட்டும் கடன் தொகையை திருப்பித்தராமல் மோசடி செய்துவிட்டார். 2022 டிசம்பர் 7ம்தேதி எனது செல்போனுக்கு தொடர்பு கொண்ட முருகானந்தம் என்னையும், என் குடும்பத்தினரையும் மத ரீதியாக இழிவாக பேசி கொலை மிரட்டல் விடுத்தார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். இதையடுத்து கீரமங்கலம் போலீசார் மோசடி, மதரீதியாக இழிவுபடுத்தியது, கொலை மிரட்டல் விடுத்தது ஆகிய 3 பிரிவுகளின் கீழ் முருகானந்தம் மீது நேற்றுமுன்தினம் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post புதுகை தொழிலதிபரிடம் ரூ.60 லட்சம் வாங்கி மோசடி பாஜ நிர்வாகி மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : BJP ,Puducherry ,Alangudi ,Chakulhameedhu ,Inam ,Keeramangalam ,Pudukottai ,
× RELATED புதுச்சேரி அடுத்த சேதராபட்டு...