×

வெளிநாட்டுக்கு போனவரு இறந்துட்டாரு அப்பா உடலை கொண்டுவர முதலமைச்சரய்யா உதவணும்: சிறுவனின் கண்ணீர் வீடியோ வைரல்

சாயல்குடி: ளிநாட்டில் இறந்த தந்தையின் உடலை ஊருக்கு கொண்டு வர முதல்வர் உதவ வேண்டும் என்று சிறுவன் கோரிக்கை விடுக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே மணலூரை சேர்ந்தவர் ராஜபாண்டி. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் ஆடு மேய்க்கும் கூலி தொழிலுக்காக குவைத் நாட்டிலுள்ள பருவாணிக்கு சென்றார். அங்கு திடீரென மயங்கி விழுந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்ததாக கூறப்படுகிறது. இந்த தகவலை அவருடன் பணிபுரிந்த சக நண்பர்கள், ராஜபாண்டியின் மனைவியிடம் போனில் தெரிவித்துள்ளனர். அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இறந்த ராஜபாண்டிக்கு வாஞ்சிநாதன், சங்கர பாண்டியன், சிவமுருகன் என 3 மகன்கள். இதில் 7 வயதான சங்கர பாண்டியன் தந்தையின் உடலை கொண்டுவர வீடியோ மூலம் முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் அந்தச் சிறுவன், ‘‘முதலமைச்சர் ஐயா… எங்க அப்பாவை பாக்கணும் போல இருக்கு… எங்க அப்பா இங்க வரணும். எங்கள படிக்க வைக்கணும்னு வெளிநாட்டுக்கு போனாரு, இறந்துட்டாருன்னு போன்ல சொல்றாங்க. என் தந்தையின் உடலை ஊருக்கு கொண்டுவர உதவிட வேண்டும்’’ என கண்ணீர் மல்க, அழுகுரலுடன் வேண்டுகோள் விடுத்தார். சிறுவனின் பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

The post வெளிநாட்டுக்கு போனவரு இறந்துட்டாரு அப்பா உடலை கொண்டுவர முதலமைச்சரய்யா உதவணும்: சிறுவனின் கண்ணீர் வீடியோ வைரல் appeared first on Dinakaran.

Tags : chief minister ,Chayalgudi ,Linnad ,
× RELATED சாயல்குடி குடிசை மாற்று வாரிய...