×

பாக். பெண்ணிடம் ரகசியம் பகிர்ந்த பிஎஸ்எப் காவலர் கைது

அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் பூஜ் எல்லை பாதுகாப்பு அலுவலகத்தில் நிலேஷ் பாலியா என்ற காவலர் கடந்த 5 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார்.  இவர் 2023 ஜனவரி முதல் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஒரு உளவுப் பெண்ணுடன் தொடர்பில் இருந்துள்ளார். அப்போது எல்லைப் பாதுகாப்புப் படையின் சிவில் மற்றும் மின்துறையின் ரகசியங்கள் அடங்கிய ஆவணங்களை பாகிஸ்தான் பெண்ணுடன் பகிர்ந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதன் அடிப்படையில் குஜராத் மாநில பயங்கரவாத தடுப்புப் படை நிலேஷ் பாலியாவை கைது செய்தது. தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலேஷ் சிறையில் அடைக்கப்பட்டார்.

The post பாக். பெண்ணிடம் ரகசியம் பகிர்ந்த பிஎஸ்எப் காவலர் கைது appeared first on Dinakaran.

Tags : . BSF ,Ahmedabad ,Nilesh Baliya ,Bhuj Border Security Office ,Gujarat ,Dinakaran ,
× RELATED குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பல...