×

ஆந்திராவில் 7 குழந்தைகள் உள்ள நிலையில் ஒரே பிரசவத்தில் பெண்ணுக்கு 3 குழந்தைகள் பிறந்தன

திருப்பதி : ஆந்திராவில் ஏற்கனவே 7 குழந்தைகள் உள்ள நிலையில் மீண்டும் கர்ப்பிணியான பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 2 ஆண் ஒரு பெண் குழந்தை பிறந்தன.
சட்டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர் புஜ்ஜு(28). பழங்குடியின பெண்ணான இவர், தனது கணவருடன் ஆந்திர மாநிலம் பத்ராச்சலம் மாவட்டத்தில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார். தம்பதிக்கு ஏற்கனவே 4 பெண் குழந்தைகள், 3 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் மீண்டும் கர்ப்பமடைந்த புஜ்ஜுவுக்கு, நேற்றுமுன்தினம் இரவு பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக அவர் பத்ராச்சலம் அடுத்த பட்டிடேம் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அங்கு அவருக்கு 2 ஆண், 1 பெண் என அடுத்தடுத்து ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்தன. குழந்தைகளும் தாயும் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

5 பெண் குழந்தைகள், 5 ஆண் குழந்தைகள் என 10 குழந்தைகளின் தாயான புஜ்ஜு அனைத்து குழந்தைகளையுமே சுகபிரசவத்தில் பெற்றெடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் புஜ்ஜுக்கு மருத்துவர்கள் ஆலோசனை கூறி நேற்று காலை குடும்ப கட்டுப்பாடு செய்தனர். இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என தெரிகிறது.

The post ஆந்திராவில் 7 குழந்தைகள் உள்ள நிலையில் ஒரே பிரசவத்தில் பெண்ணுக்கு 3 குழந்தைகள் பிறந்தன appeared first on Dinakaran.

Tags : Andhra ,Tirupati ,
× RELATED திருமலையில் காற்றுடன் கனமழை: பக்தர்கள் மகிழ்ச்சி