×

அரியானாவில் விவசாயிகளுடன் இணைந்து நடவு பணியில் ஈடுபட்டார் ராகுல்காந்தி..!!

அரியானா: அரியானாவில் விவசாயிகளை சந்தித்து கலந்துரையாடிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி அவர்களுடன் சேர்ந்து நடவு பணியில் ஈடுபட்டார். இமாச்சல பிரதேச மாநிலம் சிம்லா செல்வதற்காக டெல்லியில் இருந்து காரில் புறப்பட்டு சென்ற ராகுல்காந்தி வழியில் சோனிபட் அருகே விவசாயிகளை சந்தித்தார். அப்போது அவர்களுடன் கலந்துரையாடியதுடன் விவசாயிகள் சந்திக்கும் பிரச்சனைகளை கேட்டறிந்தார்.

தொடர்ந்து அவர்களுடன் இணைந்து டிராக்டரால் விலை நிலத்தை உழுது நடவு பணியில் ஈடுபட்டார். ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நடைப்பயணத்திற்கு பிறகு நடுத்தர மக்களை அவ்வப்போது சந்தித்து அவர்களின் தொழில் பணிச்சுமை பற்றி கேட்டறிந்து வருகிறார். அண்மையில் டெல்லி கரோல் பாக்யில் இரு சக்கர வாகன மெக்கானிக்குடன் கலந்துரையாடிய ராகுல் காந்தி வாகனங்களை பழுது பார்ப்பதை பற்றியும் தொழிலில் கிடைக்கும் வருவாய் பற்றியும் கேட்டறிந்திருந்தார்.

The post அரியானாவில் விவசாயிகளுடன் இணைந்து நடவு பணியில் ஈடுபட்டார் ராகுல்காந்தி..!! appeared first on Dinakaran.

Tags : Rakulkandi ,Ariana ,Congress ,Himachal ,
× RELATED அரியானாவில் ஆயுதங்கள், மதுபானங்கள் பறிமுதல்