×

‘பத்மஸ்ரீ’ விருதிற்கு 15க்குள் விண்ணப்பிக்கலாம்

 

கோவை, ஜூலை 8: கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய அளவில் வழங்கப்படும் பத்மஸ்ரீ விருதானது பொதுமக்களில் சிறந்த நபர்களுக்கு வழங்கப்படும் நாட்டின் இரண்டாவது உயரிய விருதாகும். இந்த விருதிற்கு பரிந்துரைக்கப்படும் நபர்கள் அந்தந்தத் துறைகளில் தேசிய விருது அல்லது மாநில அளவில் விருதுகள் பெற்றிருக்க வேண்டும்.

அதன்படி கோவை மாவட்டத்தில் கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகப்பணி மற்றும் பொறியியல், பொது விவகாரங்கள், சிவில் சேவை, வர்த்தகம் மற்றும் தொழில்துறை போன்ற அனைத்துத் துறைகளிலும் சிறந்த மற்றும் விதிவிலக்கான சாதனைகள் புரிந்துள்ள நபர்கள் தகுந்த ஆவணங்களோடு கோவை மற்றும் பொள்ளாச்சி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் தனி வட்டாட்சியர்களை தொடர்பு கொண்டு வரும் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ‘பத்மஸ்ரீ’ விருதிற்கு 15க்குள் விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,District ,Collector ,Krantikumar Padi ,Dinakaran ,
× RELATED மழையின்றி வற்றிய குளங்கள்: சரிந்தது நிலத்தடி நீர்மட்டம்