×

காவலர் வாகனம் மோதி சிறுமி பலி: ஏழரை ஆண்டுக்கு பின் மகளை சடலமாக பார்த்த தந்தை கதறல்

 

திருப்பூர்,ஜூலை8:திருப்பூர் விஜயாபுரம் செந்தில்நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெயராஜ், இவரது மனைவி ராஜேஸ்வரி(39). ஜெயராஜ் குவைத் நாட்டில் டெய்லராக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதியின் மகன் சஞ்சய் (18), மகள் திவ்யதா்ஷினி(8). விஜயாபுரம் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் திவ்யதா்ஷினி 3-ம் வகுப்பு படித்து வந்தாா். இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்க முன்பாக ராஜேஸ்வரி, பள்ளியில் இருந்து திவ்யதா்ஷினியை அழைத்துக் கொண்டு விஜயாபுரத்தில் இருந்து நல்லூா் நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். நல்லூர் போலீஸ் நிலையம் அருகே உள்ள பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது ராஜேஸ்வரி நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார்.

அப்போது பின்னால் வந்த போலீஸ் வாகனம் ராஜேஸ்வரியின் இருசக்கர வாகனத்தின் மீது எதிர் பாராதவிதமாக மோதியது. இதில் திவ்யதர்ஷினி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். ராஜேஸ்வரிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இது குறித்து நல்லூர் போலீசார் 304 ஏ பிரிவின் கீழ் அஜாக்கிரதையாக வாகனம் இயக்கி விபத்து மற்றும் மரணம் விளைவித்தல் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து வாகனத்தை இயக்கி வந்த ஊர்க்காவல்படையை சேர்ந்த வீருசின்னன் (32) என்பவரை கைது செய்தனர்.

இந்நிலையில் சிறுமியின் தந்தை ஜெயராஜ் திவ்யதர்ஷினி 6 மாத குழந்தையாக இருக்கும் போது குவைத் நாட்டிற்கு சென்றுள்ளார். தற்போது வரை தமிழகம் வந்து தனது மகளை பார்க்காமல் குவைத் நாட்டில் இருந்தார். போலீசார் முயற்சியால் தமிழ்நாட்டிற்கு நேற்று விரைந்து வந்தார். தொடர்ந்து திருப்பூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் இருந்த மகளின் சடலத்தை பார்த்து கதறி அழுதார். தொடர்ந்து போலீசார் சிறுமியின் உடலை ஒப்படைத்தனர்.

The post காவலர் வாகனம் மோதி சிறுமி பலி: ஏழரை ஆண்டுக்கு பின் மகளை சடலமாக பார்த்த தந்தை கதறல் appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Jayaraj ,Rajeshwari ,Senthilnagar ,Vijayapuram, Tirupur ,Kuwait ,
× RELATED 10 நிமிடங்கள் கட் ஆன திருப்பூர் ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி காட்சி