×

கல்லூரி பேராசிரியர் கடத்தலா? போலீசார் விசாரணை கீழ்பென்னாத்தூரில்

கீழ்பென்னாத்தூர், ஜூலை 8: கீழ்பென்னாத்தூரில் கல்லூரி பேராசிரியர் காணாமல் போனதால் அவரது மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை யாரேனும் கடத்தி சென்றார்களா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் பள்ள மிஷன் தெருவில் வசிப்பவர் பாலாஜி(38). இவரது மனைவி சவுமியா(33). இவர்களுக்கு ஜோகித், வருண்நித்தா என 2 குழந்தைகள் உள்ளனர். பாலாஜி செஞ்சி தாலுகா நாட்டார் மங்கலத்தில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் பாலாஜி கடந்த ஏப்ரல் மாதம் 27ம் தேதி கல்லூரிரிக்கு சென்று வருவதாக மனைவியிடம் கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த மனைவி மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து சவுமியா கீழ்பென்னாத்துார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் சென்னையை சேர்ந்த சிவகுமார் என்பவரிடம் பாலாஜி கடன் வாங்கியிருந்ததாகவும், பணத்தை திருப்பித்தருமாறு சிவகுமார் பல முறை கேட்டு வந்ததாவும் தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில், சப்-இன்ஸ்பெக்டர் முத்துகுமார் வழக்குப்பதிவு செய்து பாலாஜியை பணப்பிரச்னையில் யாரேனும் கடத்தி சென்றார்களா? அல்லது வேறு எங்கு சென்றுள்ளார் என விசாரணை மேற்கொண்டு தேடி வருகிறார்.

The post கல்லூரி பேராசிரியர் கடத்தலா? போலீசார் விசாரணை கீழ்பென்னாத்தூரில் appeared first on Dinakaran.

Tags : Kilpennathur ,Kilpinnathur ,Dinakaran ,
× RELATED விவசாய பாசனத்திற்கு தண்ணீரின்றி...