×

பட்டியலினத்தவர் உரிமைகள் நீர்த்துப்போகாமல் காப்போம்: டிடிவி.தினகரன் டிவிட்

சென்னை: இரட்டை மலை சீனிவாசன் பிறந்தநாளில் பட்டியலினத்தவர்களின் உரிமைகள் நீர்த்துப்போகாமல் பாதுகாப்போம் என உறுதி ஏற்போம் என டிடிவி.தினகரன் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டிருப்பதாவது: தென்னகத்தின் அம்பேத்கர் எனப் போற்றப்படும் இரட்டைமலை சீனிவாசன் அப்போதைய சென்னை மாகாணத்தில் அமைந்த நீதிகட்சி அரசில் தாழ்த்தப்பட்டோரின் உரிமைகளை வலியுறுத்தும் அரசாணை வெளிவர காரணமாக இருந்ததோடு மட்டுமின்றி மகாத்மா காந்தி தமிழ் மொழியை அறிந்து கொள்வதற்கு மூலக்காரணமாக இருந்தவர் இரட்டைமலை சீனிவாசன். மேலும், பட்டியலினத்தவர்களின் உரிமைகளுக்காகவும், நலனுக்காகவும் தம் வாழ்நாளை அர்ப்பணித்தவர். அவரது பிறந்தநாளில் பட்டியலினத்தவர்களின் உரிமைகளை எக்காரணத்தைக் கொண்டும் நீர்த்துப்போகாமல் பாதுகாப்போம் என உறுதி ஏற்போம். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

The post பட்டியலினத்தவர் உரிமைகள் நீர்த்துப்போகாமல் காப்போம்: டிடிவி.தினகரன் டிவிட் appeared first on Dinakaran.

Tags : TTV.Thinakaran ,CHENNAI ,Twin Hill ,Srinivasan ,DTV ,Dinakaran ,Twitter ,
× RELATED சொல்லிட்டாங்க…