×

அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு புதிரை வண்ணார் இன மக்களின் நிலையை உயர்த்த ரூ.10 கோடி

சென்னை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: 2023-24ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட உரையில், “புதிரை வண்ணார்கள் நல வாரியத்திற்கு புத்துயிர் அளித்து வாழ்வாதார மேம்பாட்டு நடவடிக்கைகள் நல பணிகளை மேற்கொள்ள ரூ.10 கோடி வழங்கப்படும்” என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் பொருட்டு, புதிரை வண்ணார் இன மக்களின் நிலையை உயர்த்துவதற்கும், கல்வியில் மேம்பாடு அடைய செய்வதற்கும் ஏதுவாக இவ்வின மக்களின் வாழ்வாதாரம் பற்றிய அறிக்கை மற்றும் அதனை செயல்படுத்துவதற்கான மென்பொருள் உருவாக்குதல், கணக்கெடுப்பு நடத்துதல், இணைய முகப்பினை உருவாக்குதல், தொழில் பயிற்சிகள், திறன் மேம்பாட்டு பயிற்சிகள், போட்டி தேர்வுகளில் கலந்து கொள்வதற்கான பயிற்சிகள் போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகளை மேற்கொள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் ரூ.10 கோடி ஒப்பளிப்பு வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

The post அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு புதிரை வண்ணார் இன மக்களின் நிலையை உயர்த்த ரூ.10 கோடி appeared first on Dinakaran.

Tags : Government of Tamil Nadu ,Chennai ,Adi ,Dravidar ,Tribal Welfare Department ,
× RELATED அங்கீகரிக்கப்படாத CNG/LPG மாற்றங்கள்...