×

உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்கு எதிரான போட்டியை ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறோம்: பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம்

துபாய்: நாங்கள் உலகக் கோப்பையில் விளையாடப் போகிறோம், இந்தியா மட்டுமல்ல இன்னும் எட்டு அணிகள் உள்ளன. அனைத்து அணிகளை வென்றால் மட்டுமே நாங்கள் இறுதிப் போட்டிக்கு முடியும். இந்தியாவுக்கு எதிரான போட்டிக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறோம் என பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.

நடப்பாண்டு உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் 5ம் தேதி தொடங்க உள்ளது. இந்திய அணியின் முதல் போட்டி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அக்டோபர் 8ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்க உள்ளது. இருந்த போதிலும் அக்டோபர் 15ம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும் இந்தியா – பாக்கித்தான் அணிகளுக்கு இடையேயான போட்டிக்காகவே அனைவரும் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

உலகக்கோப்பை தொடர் குறித்து பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் கூறியதாவது; “நாங்கள் உலகக் கோப்பையில் விளையாடப் போகிறோம், இந்தியாவுக்கு எதிராக மட்டும் விளையாடப் போவதில்லை” இன்னும் எட்டு அணிகள் உள்ளன. அனைத்து அணிகளை வென்றால் மட்டுமே நாங்கள் இறுதிப் போட்டிக்கு செல்வோம்.

நாங்கள் ஒரு அணியில் மட்டும் கவனம் செலுத்தவில்லை, போட்டியில் மற்ற அனைத்து அணிகளிலும் கவனம் செலுத்துகிறோம். எங்கள் திட்டம் இதுதான். அவர்கள் அனைவருக்கும் எதிராக நாங்கள் நன்றாக விளையாடி அவர்களுக்கு எதிராக வெற்றி பெற வேண்டும். இந்திய அணிக்கு எதிரான போட்டியை ஆவலுடன் காத்திருக்கிறோம்” என பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் கூறியுள்ளார்.

The post உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்கு எதிரான போட்டியை ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறோம்: பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் appeared first on Dinakaran.

Tags : World Cup ,India ,Pakistan ,Babar Azam ,Dubai ,Dinakaran ,
× RELATED டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட்...