×

கோவை சரக டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல்!

சென்னை: கோவை சரக டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட செய்தியை அறிந்து துயருற்றேன் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கோவை சரக டிஐஜி விஜயகுமார் தனது வீட்டில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் டிஐஜி விஜயகுமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் விஜயகுமார் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தற்கொலை செய்து கொண்ட டிஐஜி விஜயகுமார் கடந்த சில தினங்களாக மன உளைச்சலில் இருந்ததாக தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் தகவல் தெரிவித்துள்ளார். இந்நிலையில், விஜயகுமார் மறைவுக்கு அமைச்சர் உதயநிதி இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், கோவை சரக காவல்துறை துணைத்தலைவராக திறம்பட பணியாற்றி வந்த திரு.விஜயகுமார் ஐ.பி.எஸ் அவர்கள் அகால மரணம் அடைந்த செய்தியறிந்து துயருற்றேன். மாவட்ட காவல் கண்காணிப்பாளர், சென்னை மாநகர காவல்துறையின் துணை ஆணையர், கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் ஆகிய பணிகளில் துடிப்புடன் செயல்பட்ட விஜயகுமார் அவர்களின் மரணம் தமிழ்நாடு காவல்துறைக்கு பேரிழப்பு. அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் என்று குறிப்பிட்டுள்ளார்.

The post கோவை சரக டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல்! appeared first on Dinakaran.

Tags : Gov ,Vijayakumar ,Minister ,Udaiyanidhi Stalin ,Chennai ,Udayanidhi ,Govai Saraka ,DIG ,Cov ,Saraki ,
× RELATED திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு