×

பிளஸ்1 மாணவியிடம் பாலியல் சீண்டல் மாணவன் மீது போக்சோ பாய்ந்தது

புதுச்சேரி, ஜூலை 7: புதுச்சேரி அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டுக்கான வகுப்புகள் ஜூன் 14ம் தேதி முதல் துவங்கி நடந்து வருகிறது. காரைக்காலில் உள்ள தனியார் இருபாலர் பள்ளியில் ஆயிரக்கணக்கான மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். அங்கு பிளஸ்1 பயிலும் மாணவியிடம், சக மாணவர் காதல் எனும் போர்வையில் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான மாணவி, பெற்றோரிடம் முறையிடவே இவ்விவகாரம் குழந்தைகள் நலக்குழுவுக்கு சென்றது. இது தொடர்பாக மாணவியிடம் விசாரித்த குழந்தைகள் நலக்குழுவினர் உடனே சம்பந்தப்பட்ட மாணவன் மீது நடவடிக்கை எடுக்குமாறு போலீசுக்கு பரிந்துரைத்தது. இதையடுத்து பிளஸ்1 மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக பிளஸ்1 மாணவன் மீது போக்சோ பிரிவில் வழக்குபதிந்த காரைக்கால் போலீசார், அவரை மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்ப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

The post பிளஸ்1 மாணவியிடம் பாலியல் சீண்டல் மாணவன் மீது போக்சோ பாய்ந்தது appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Puducherry Government ,
× RELATED புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை