×

நெல்லையில் லாரிகளில் மண் கடத்திய 3 பேர் கைது

நெல்லை, ஜூலை 7: நெல்லையில் டிப்பர் லாரிகளில் செம்மண் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர். தச்சநல்லூர் ரவுண்டானா பகுதியில் நேற்று முன்தினம் தச்சநல்லூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந் தனர். அப்போது அந்த வழி யாக வந்த 3 டிப்பர் லாரிகளை வழிமறித்து விசாரித்தனர். இதில் லாரிகளில் உரிய அனுமதியின்றி செம்மண் கடத்தி வந்தது தெரியவந்தது. இதுகுறித்து தச்சநல்லூர் காவல் துறை இந்திரா மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து லாரி டிரைவர்கள் ராஜவல்லிபுரத்தை சேர்ந்த அடைக்கலம் மகன் சுடலைமுத்து (31), தாழையூத்து நகரை சேர்ந்த முத்துபாண்டி மகன் வேல்முத்து (30), மாயாண்டி மகன் கைலாசம் (43) ஆகியோரை கைது செய்தனர். மேலும் 3 டிப்பர் லாரிகள், 7 யூனிட் செம்மண் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

The post நெல்லையில் லாரிகளில் மண் கடத்திய 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Nellai ,Thachanallur ,Dinakaran ,
× RELATED ஜெயக்குமார் மரணம் தொடர்பாக நெல்லை...