×

சாலை தடுப்பில் பேருந்து மோதி டிரைவர் உட்பட 7 பேர் காயம்

தாம்பரம்: ஆலந்தூர் மேம்பால சாலை தடுப்பில் மாநகர பஸ் மோதி டிரைவர் உட்பட 7 பேர் காயமடைந்தனர். சிறுசேரியில் இருந்து கோயம்பேடு நோக்கி மாநகர பேருந்து ஒன்று நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் மடுவின்கரை – ஆலந்தூர் மேம்பாலத்தில் இருந்து கீழே இறங்கியது. அப்போது, திடீரென கட்டுப்பட்டை இழந்த பேருந்து, கிண்டி காந்தி மார்க்கெட் அருகே சாலை தடுப்பு மீது பயங்கரமாக மோதியது. இதில், பேருந்தை ஓட்டிய சேட்டு என்ற டிரைவருக்கும், பெண்கள் உட்பட 6 பயணிகளுக்கும் காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு அப்பகுதியில் உள்ளவர்கள் முதலுதவி அளித்து தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தால் அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்ததும் பரங்கிமலை போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து போக்குவரத்தினை சரிசெய்தனர். பின்னர் சேதமடைந்த பேருந்தை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

The post சாலை தடுப்பில் பேருந்து மோதி டிரைவர் உட்பட 7 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : Tambaram ,Alandur ,Sirusheri ,Dinakaran ,
× RELATED தாம்பரம் மாநகராட்சி பகுதி...