×

என்னை பிரதமராக்க இந்திய தொழிலதிபர் முயற்சித்தார்: நேபாள பிரதமர் சர்ச்சை பேச்சு

காத்மண்டு: நேபாள பிரதமர் புஷ்ப கமல் தால் பிரசண்டா காத்மண்டுவில் நடந்த விழா ஒன்றில் பேசியதாவது: இந்தியாவை பூர்வீகமாக கொண்ட தொழிலதிபர் பிரீதம் சிங் ஒருமுறை என்னை பிரதமராக்குவதற்கான முயற்சிகள் எடுத்தார். இதற்காக பலமுறை டெல்லி சென்றார். காத்மண்டுவில் அரசியல் தலைவர்களை சந்தித்து என்னை பிரதமராக்க பல சுற்று பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்தியா-நேபாள உறவை மேம்படுத்துவதில் சிங் முக்கிய பங்காற்றினார். இவ்வாறு அவர் கூறினார். அவரது இந்த சர்ச்சை பேச்சால், ‘இந்தியாவால் நியமிக்கப்பட்ட பிரதமர் தேவையில்லை ,’’ என்று எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, ஆளுங்கட்சியை சேர்ந்த எம்பிக்களும் பிரதமரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

The post என்னை பிரதமராக்க இந்திய தொழிலதிபர் முயற்சித்தார்: நேபாள பிரதமர் சர்ச்சை பேச்சு appeared first on Dinakaran.

Tags : Nepal ,Kathmandu ,Pushpa Kamal Tal Prasanda ,India ,
× RELATED சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இளம்பெண்...