×

1,000 பெண்களை போனில் படம் பிடித்த டிரைவர் கைது

உத்தமபாளையம்: தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே ராயப்பன்பட்டியை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (48), வேன் டிரைவர். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு, சாலையில் நடந்து சென்ற பெண்ணை செல்போனில் படம் பிடித்துள்ளார். இதைப் பார்த்த அப்பெண்ணின் கணவர், ஜெயச்சந்திரனை கண்டித்துள்ளார். அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த புகாரில் ராயப்பன்பட்டி போலீசார், ஜெயச்சந்திரனை அழைத்து விசாரணை நடத்தியுள்ளனர். மேலும், அவரது செல்போனை வாங்கி பார்த்ததில், பெண்கள், மாணவிகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகைப்படங்கள் இருந்துள்ளன. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து ஜெயச்சந்திரனை கைது செய்தனர். மேலும், எதற்காக போட்டோ எடுத்தார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post 1,000 பெண்களை போனில் படம் பிடித்த டிரைவர் கைது appeared first on Dinakaran.

Tags : Uttamapalayam ,Jayachandran ,Rayappanpatti ,Uttamapalayam, Theni district ,
× RELATED உத்தமபாளையத்தில் பஸ் மோதி தூய்மை பணியாளர் பலி