×

ஆளுநர் மாளிகையில் இருந்து உண்மைக்கு புறம்பான செய்தி வெளியாகி வருகிறது: அமைச்சர் ரகுபதி பேட்டி

சென்னை: தான் அனுப்பிய கடிதத்துக்கு ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்தது தொடர்பாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அமைச்சர் ரகுபதி, “ஆளுநர் மழுப்பலாக விளக்கம் அளித்துள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர்களை காப்பாற்ற ஆளுநர் எடுத்துள்ள தந்திரமான நடவடிக்கை. ஆளுநர் மாளிகையில் இருந்து உண்மைக்கு புறம்பான செய்தி வெளியாகி வருகிறது. எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடர்பாக எந்தக் கோரிக்கையும் மாநில அரசிடம் இருந்து கிடைக்கப் பெறவில்லை என்பது பொய். ஆளுநர் கூறியுள்ள விளக்கங்கள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை. அதிமுக முன்னாள் அமைச்சர்களை காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் ஆளுநர் ரவி செயல்படுகிறார்.

கடந்த அதிமுக ஆட்சியில் குட்கா வியாபாரிகளிடம் மாமூல் பெற்ற விஜயபாஸ்கர், ரமணா மீது நடவடிக்கை எடுக்கக்கோரியதற்கு சட்டநிபுணர்களுடன் ஆலோசனையில் இருப்பதாக மழுப்பல் பதில் அளிக்கிறார். சட்டநிபுணர்களுடன் ஆலோசனை என்ற பெயரில் 10 மாதமாக கிடப்பில் போட்டுள்ளார். ” என்றார். முன்னதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அனுப்பிய கடிதத்துக்கு விளக்கம் அளித்துள்ள ஆளுநர் மாளிகை, முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி மீது லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்துள்ள வழக்கில், விசாரணை அறிக்கையை அரசு தாக்கல் செய்ய வேண்டியுள்ளது. எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்பாக எந்த குறிப்பும் அல்லது கோரிக்கையும் அரசிடம் இருந்து வரவில்லை என தெரிவித்திருந்தது குறிப்பிடதக்கது.

The post ஆளுநர் மாளிகையில் இருந்து உண்மைக்கு புறம்பான செய்தி வெளியாகி வருகிறது: அமைச்சர் ரகுபதி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Governor House ,Minister ,Ragupathi ,Chennai ,Law Minister ,Ragupati ,Dinakaran ,
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...