×

தாம்பரம் அருகே சாலையில் ஓடிய வேன் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு..!!

தாம்பரம்: தாம்பரம் அருகே சாலையில் ஓடிய வேன் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தாம்பரம் அடுத்த கிஷ்கிந்தா சாலையில் தர்கா சென்ற பகுதியில் தனியார் வேன் திடீரென தீ பற்றி எரிந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. ஸ்ரீபெரம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு வேலைக்கு ஆட்களை ஏற்றி செல்லும் ராஜலஷ்மி டிராவல்ஸ் எனும் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான வேன் ஒன்று பழுது ஏற்பட்டுள்ளது.

கடந்த 2 நாட்களுக்கு முன்பாக தாம்பரம் தர்கா சாலையில் உள்ள பழுதுபார்க்கும் மெக்கானிக் ஷெட்யில் விடப்பட்டது. இந்நிலையில் இன்று அந்த வேன் சீர் செய்யப்பட்டு வேனின் ஓட்டுநர் பார்த்திபன் வேனை தர்கா சாலையில் ஓட்டிச்சென்றார் அப்போது திடீரென அந்த வேனின் முன்பகுதியிலிருந்து புகை தீயாக மாரி மளமள வென்று தீ பற்றியது. அதன் முன் இருக்கைகள் மற்றும் ஓட்டுநர் இருக்கும் இடத்திலும் தீ பரவியதால் ஓட்டுநர் வேனிலிருந்து குதித்து தப்பினார். இதனை அடுத்து அங்கு உள்ளவர்கள் தீயை அணைக்க மண் மற்றும் தண்ணீர்களை ஊற்றி தீயை அணைக்க முற்பட்டனர்.

ஆனால் தீ கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை இதனை அடுத்து தாம்பரம் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்த நிலையில் தாம்பரம் தீயணைப்பு பயிற்சி பள்ளியில் இருந்து சென்ற வீரர்கள் அரைமணி நேரமாக போராடி தீயை அனைத்தனர். மேலும் அந்த வேன் முழுவதும் எரிந்து நாசமானது. இதனால் தாம்பரம் அடுத்த கிஷ்கிந்தா தர்கா சாலையில் இரு புறமும் செல்லும் வாகனங்கள் ஆங்காங்கே நின்றன. மேலும் தீயை முழுவதும் கட்டுப்படுத்திய நிலையில் போலீசாரும், தீயணைப்பு துறையினரும் வேனை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரமாக பரபரப்பாக காணப்படுகிறது.

The post தாம்பரம் அருகே சாலையில் ஓடிய வேன் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Dambaram ,Thambaram ,Kishkinda Road ,tambaram ,Dinakaran ,
× RELATED ஜேஇஇ நுழைவு தேர்வில் மதிப்பெண்...