×

நெல்லையில் பைக் மீது அரசு பஸ் மோதி வாலிபர் பலி; இருவர் படுகாயம்

நெல்லை : நெல்லை அரியகுளம் நான்கு வழிச்சாலையில் பைக் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் வாலபிர் பலியானார். இருவர் படுகாயத்துடன் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பாளை அருகே உள்ள மருதூரை சேர்ந்தவர்கள் முருகேசன்(33), துரை (35), சுப்பிரமணியன்(39). நண்பர்களான இவர்கள் நேற்று மாலை மருதூரில் இருந்து அரியகுளம் பகுதிக்கு பைக்கில் வந்தனர். அப்போது அரியகுளம் சாலையில் இருந்து நெல்லை – தூத்துக்குடி நான்கு வழிச்சாலையை பைக்கில் கடக்க முயன்றபோது நெல்லையில் இருந்து தூத்துக்குடி சென்ற அரசு பஸ் பைக் மீது மோதியது.

இந்த விபத்தில் பைக்கிலிருந்து மூவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். தகவல் கேள்விபட்டு தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்கள் உதவியுடன் மூவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முருகேசன் பரிதாபமாக இறந்தார். மேலும் துரை, சுப்பிரமணியனுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post நெல்லையில் பைக் மீது அரசு பஸ் மோதி வாலிபர் பலி; இருவர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Nellai ,Ariyakulam ,Nella ,Dinakaran ,
× RELATED நெல்லையில் மழையால் சேதமடைந்த...