×

நத்தம் அருகே தொழிலாளி தற்கொலை

 

நத்தம், ஜூலை 6: நத்தம் அருகே கருத்தலக்கம்பட்டியை சேர்ந்தவர் மருதராஜ் (30). கூலித்தொழிலாளி. இவரது மனைவி நந்தினி. இவர்களுக்கு திருமணமாகி 7 ஆண்டுகளாகிறது. குழந்தை இல்லை. தம்பதியிடையே கடந்த சில நாட்களாகவே குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த மருதராஜ் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷத்தை சாப்பிட்டுவிட்டார்.

அருகில் இருந்தவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருதராஜை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து நத்தம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post நத்தம் அருகே தொழிலாளி தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Natham ,Nattam ,Marutharaj ,Thilakambatti ,Nandini ,
× RELATED நத்தம் பகுதியில் ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு பணிகள் ஆய்வு