×

மாணவர் பேரவை நிர்வாகிகள் பதவி ஏற்பு

திருச்செங்கோடு: திருச்செங்கோடு கேஎஸ்ஆர் அக்ஷரா அகாடமி பள்ளியில், மாணவர் பேரவை நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது. பள்ளிகளின் இயக்குநர் அமுதா ஆசைதம்பி விழாவை துவக்கி வைத்தார். முதல்வர் விஜயலட்சுமி முன்னிலை வகித்தார். சேலம், சிக்னல் நிறுவன கட்டளை அதிகாரி கர்னல் சூரஜ் நாயர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இளைய மாணவர் பேரவை உறுப்பினர்கள் தொடக்க விழாவில், கே.எஸ்.ஆர் பள்ளிகளின் தலைமை ஆசிரியர் விநாயகமூர்த்தி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். மாணவர்களுக்கான பதவி சின்னத்தை பள்ளிகளின் இயக்குனர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் வழங்கி கௌரவித்தனர்.தொடர்ச்சியாக 4 குழுக்களின் தலைமை ஆசிரியர்கள், அந்தந்த குழுவின் தலைமை மாணவர்களுக்கு பதவிச்சின்னம் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். பின்னர், கலைநிகழ்ச்சிகள் நடந்தது. …

The post மாணவர் பேரவை நிர்வாகிகள் பதவி ஏற்பு appeared first on Dinakaran.

Tags : Student Council ,Tiruchengode ,KSR Akshara ,Academy ,School ,Amuda… ,Dinakaran ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னேற்பாடுகள் தீவிரம்