×

ரூ.40 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனை

அரூர்: அரூர் அடுத்த புளுதியூர் வாரச்சந்தையில், ரூ.40 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனையானது. அரூர் அடுத்த கோபிநாதம்பட்டி கூட்ரோடு புளுதியூரில், வாரந்தோறும் புதன்கிழமை கால்நடைகள் சந்தை நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த சந்தையில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், திருவண்ணமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் வெள்ளாடு, செம்மறி ஆடு, கறவை மாடுகள், எருமை மாடு, இறைச்சி மாடு, நாட்டுக்கோழி மற்றும் சேவல் ஆகியவற்றை விற்பனைக்கு கொண்டு வந்தனர். வெளிமாநில மற்றும் தமிழத்தின் பல்வேறு மாவட்டங்களை சேந்த வியாபாரிகள், கால்டைகளை வாங்க வந்தனர். இதில் ஒரு மாடு ரூ.8,000 முதல் ரூ.39,300 வரையும், ஆடுகள் ரூ.6,000 முதல் ரூ.10,500 வரை விற்பனையானது. மொத்தம் ரூ.40லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

The post ரூ.40 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனை appeared first on Dinakaran.

Tags : Aroor ,Pluthiyur ,Arur ,Gopinathampatti Kootrod ,Dinakaran ,
× RELATED நாய் கடித்து மான் சாவு