×

திருப்பூர் தெற்கு தொகுதி எம்எல்ஏ முன்னிலையில் அவிநாசி லிங்கேசுவரர் கோவிலுக்கு புதிய அறங்காவலர் பதவி ஏற்பு

 

அவிநாசி, ஜூலை 6: இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகத்தில் நேற்று அவிநாசி லிங்கேசுவரர் கோவிலின் அறங்காவலர்கள் தெற்கு தொகுதி எம்எல்ஏ செல்வராஜ் முன்னிலையில்பதவியேற்றனர். அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலுக்கு அறங்காவலர் குழு தமிழக அரசால் நியமிக்கப்பட்டது. அகில இந்திய ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் சக்திவேல் அறங்காவலர் குழுத் தலைவராகவும், கருணாம்பிகா பொன்னுசாமி, ரவிப்பிரகாஷ், கார்த்திகா, ஆறுமுகம் ஆகியோர் அறங்காவலர்களாகவும் தமிழக அரசால் நியமிக்கப்பட்டனர்.

புதியதாக நியமனம் செய்யப்பட்டுள்ள அறங்காவலர் குழுத்தலைவர் சக்திவேல் மற்றும் அறங்காவலர்கள், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகத்தில் நேற்று திருப்பூர் தெற்கு தொகுதி எம்எல்ஏ செல்வராஜ் முன்னிலையில் பதவியேற்றனர். இவர்களை, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் குமரதுரை, திருப்பூர் தெற்கு தொகுதி எம்எல்ஏ, திருப்பூர் மாவட்ட திமுக செயலாளர் செல்வராஜ், கோவில் செயல் அலுவலர் பெரிய மருதுபாண்டியன், அவிநாசி திமுக ஒன்றிய செயலாளர் சிவபிரகாஷ் மற்றும் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் சரவணன் நம்பி, முன்னாள் மாவட்ட திமுக விவசாய அணி அமைப்பாளர் செல்வரங்கம் ஆகியோர் ஆன்மீக பணிகள் சிறக்க வாழ்த்து தெரிவித்தனர்.

The post திருப்பூர் தெற்கு தொகுதி எம்எல்ஏ முன்னிலையில் அவிநாசி லிங்கேசுவரர் கோவிலுக்கு புதிய அறங்காவலர் பதவி ஏற்பு appeared first on Dinakaran.

Tags : Avinashi Lingeswarar Temple ,MLA ,Tirupur South Constituency ,Avinasi ,Avinasi Lingeswarar Temple ,Commissioner ,Hindu Religious Charities ,
× RELATED ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு :...