×

22 தமிழக மீனவர்கள் விடுதலை

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே மண்டபம் மற்றும் ஜெகதாபட்டினம் கடற்கரையில் இருந்து கடந்த ஜூன் 21ம் தேதி நான்கு படகுகளில் பாக் ஜலசந்தி கடலில் மீன்பிடிக்க சென்ற 22 தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். மீனவர்களின் 4 விசைப்படகுகளும் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. யாழ்ப்பாணம் சிறையில் விசாரணை கைதிகளாக இருந்த 22 மீனவர்களையும் நேற்று மாலை ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் இலங்கை போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது அவர்கள் அனைவரையும் விடுவித்து நீதிபதி உத்தரவிட்டார். ஆனால் படகுகள் விடுவிக்கப்படவில்லை. விடுவிக்கப்பட்ட மீனவர்கள் இன்று தமிழகம் திரும்புவார்கள்.

The post 22 தமிழக மீனவர்கள் விடுதலை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Fishermen Freed ,Rameswaram ,Jegadhapatnam ,Tamil Fishermen Freed ,
× RELATED மின் தடையை சீரமைக்க கோரிக்கை