×

பல லட்சம் சீட்டு பணம் மோசடி: ஒருவர் கைது

அம்பத்தூர்: கொரட்டூர் சிவலிங்கபுரத்தை சேர்ந்தவர் ராஜா (36), கூலித்தொழிலாளி. கொரட்டூர் அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் சிவா (40). இவர், கடந்த இரண்டு வருடங்களாக ராஜா வீட்டிற்கு பால் சப்ளை செய்துள்ளார். இந்நிலையில் சிவா விடம் ராஜா ரூ.5 லட்சம் சீட்டு போட்டுள்ளார். சீட்டு முடிந்தவுடன் ரூ.5 லட்சம் பணத்தை தராமல் கடந்த ஒரு வருடமாக சிவா ஏமாற்றி வந்துள்ளார். மேலும் சிவா, மாடு வாங்க பணம் வேண்டும் என்று கேட்ட நிலையில் ராஜா, ரூ.1 லட்சம் கொடுத்துள்ளார். சீட்டு பணம் மற்றும் மாடு வாங்க கொடுத்த பணத்தை கடந்த ஒரு வருடமாக திருப்பி தராமல் சிவா ஏமாற்றி வந்துள்ளார். இதுகுறித்து கொரட்டூர் போலீசில் ராஜா புகார் கொடுத்தார்.

குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ரமணி வழக்கு பதிவு செய்து விசாரித்தார். அதில், சீட்டு நடத்தி வந்த சிவா அதே பகுதியில் உள்ள அருளானந்தம் என்பவரிடம் ரூ.9 லட்சம், ஜெயந்தி என்பவரிடம் ரூ.1 லட்சம் என பலரிடம் பல லட்சம் சீட்டு பணம் மோசடி செய்தது தெரியவந்தது.

The post பல லட்சம் சீட்டு பணம் மோசடி: ஒருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Ampathur ,Raja ,Sivalingapuram, Koratur ,Siva ,Korattur Agraharam ,
× RELATED அம்பத்தூர் தொழிற்பேட்டையில் மாநகர...