×

பழங்குடியின தொழிலாளி மீது சிறுநீர் கழித்த பா.ஜ பிரமுகர் தே.பா. சட்டத்தில் கைது: வீட்டை இடித்து தள்ளியது அரசு

சித்ஹி;பழங்குடியின தொழிலாளி மீது சிறுநீர் கழித்த பா.ஜ பிரமுகர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார். அவரது வீடும் இடித்து தள்ளப்பட்டது. மத்தியபிரதேச மாநிலம் சித்ஹி மாவட்டத்தில் சாலையோரம் அமர்ந்திருந்த பழங்குடியின தொழிலாளி மீது ஒரு நபர் சிறுநீர் கழித்தார். இந்த கொடூர சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது. இதனை தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போலீசார் பழங்குடியின தொழிலாளர் மீது சிறுநீர் கழித்த நபர் அதேபகுதியை சேர்ந்த பா.ஜ எம்எல்ஏவின் நெருங்கிய உறவினரும், பா.ஜ பிரமுகருமான பர்வேஷ் சுக்லா என்பதை கண்டுபிடித்தனர். தலைமறைவாக இருந்த பர்வேஷ் சுக்லாவை போலீசார் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்தனர். அவரை ரேவா மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர். மேலும் மாநில அரசு உத்தரவுப்படி சுக்லாவின் வீட்டை நேற்று அதிகாரிகள் இடித்து தள்ளினார்கள். அப்போது இது பழைய வீடியோ. இப்போது தேர்தலுக்காக இதைப்பயன்படுத்துகிறார்கள் என்று சுக்லாவின் சகோதரி தெரிவித்தார்.

The post பழங்குடியின தொழிலாளி மீது சிறுநீர் கழித்த பா.ஜ பிரமுகர் தே.பா. சட்டத்தில் கைது: வீட்டை இடித்து தள்ளியது அரசு appeared first on Dinakaran.

Tags : BJP ,TDP ,Govt ,Siddhi ,Dinakaran ,
× RELATED நெல்லையில் அரசு பேருந்து ஓட்டுநர்,...