×

சீட்டு நடத்துவதாக பல லட்சம் மோசடி: ஒருவர் கைது

அம்பத்தூர்: கொரட்டூர் சிவலிங்கபுரத்தை சேர்ந்தவர் ராஜா (36). கூலித்தொழிலாளி. கொரட்டூர் அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர். சிவா(40). இவர், கடந்த இரண்டு வருடங்களாக ராஜா வீட்டிற்கு பால் சப்ளை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சிவாவும் அவரது மனைவி அமுதாவும் கேட்டுக் கொண்டதன் பேரில் ராஜா ரூ.5 லட்சம் சீட்டு போட்டுள்ளார், பின்னர் சீட்டு முடிந்தவுடன் ரூ.5 லட்சம் சீட்டு பணம் தராமல் சிவா ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் சிவா, மாடு வாங்க பணம் வேண்டும் என்று கேட்ட நிலையில் மேலும் ரூ.1 லட்சத்தை ராஜா கொடுத்துள்ளார்.

சீட்டு பணம் மற்றும் மாடு வாங்க கொடுத்த பணம் என மொத்தம் ரூ.6 லட்சத்தை கடந்த ஒரு வருடமாக திருப்பி தராமல் சிவா ஏமாற்றி வந்துள்ளார். இது குறித்து ராஜா கொரட்டூர் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ரமணி வழக்கு பதிவு செய்தனர். விசாரணையில் சீட்டு நடத்தி வந்த சிவா அதே பகுதியில் உள்ள அருளானந்தம் என்பவரிடம் ரூ.9 லட்சம், ஜெயந்தி என்பவரிடம் ரூ.1 லட்சமும் சீட்டு பணம் தராமல் பாக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. போலீசார் சிவாவை கைது செய்தனர்.

The post சீட்டு நடத்துவதாக பல லட்சம் மோசடி: ஒருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Ampathur ,Raja ,Sivalingapuram, Korattur ,Korattur Agraharam ,Shiva ,
× RELATED அம்பத்தூர் தொழிற்பேட்டையில் மாநகர...