×

வாலிபர் மயங்கி விழுந்து பலி பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் செய்யாறு அருகே

செய்யாறு, ஜூலை 5: செய்யாறு அருகே வடமாநில வாலிபர் மயங்கி விழுந்து பலியானார். பீகார் மாநிலம், தானாசிபூர் பாராஹத் தாலுகா, நாராயணபூர் அருகே உள்ள பக்கபுல் கிராமத்தை சேர்ந்தவர் அஞ்சு முர்மு(25). இவரது மனைவி ஷம்மி. இருவரும் கடந்த மாதம் 27ம் தேதி திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறுக்கு வந்து, அங்குள்ள சிப்காட்டில் நடைபெறும் கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்தனர். இதற்காக அருகே உள்ள சோழவரம் கிராமத்தில் வீடு வாடகை எடுத்து தங்கியிருந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை அஞ்சு முர்மு அருகே உள்ள டீக்கடைக்கு டீ குடிக்க நடந்து சென்றார். கடையின் அருகே சென்றபோது திடீரென மயங்கி கீழே விழுந்தார். அருகில் இருந்தவர்கள், அவரை மீட்டு சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் தூசி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வாலிபர் மயங்கி விழுந்து பலி பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் செய்யாறு அருகே appeared first on Dinakaran.

Tags : Seyyar ,Bihar ,North State ,Thanasipur Parahat Taluka ,Cheyyar ,Dinakaran ,
× RELATED செய்யாறு அருகே கார் மீது லாரி மோதி தம்பதி உயிரிழப்பு..!!