×

மறுவாழ்வு மையத்தில் வாலிபர் பரிதாப சாவு

 

மதுரை, ஜூலை 5: மதுரை திருப்பரங்குன்றம் கீழத்தெருவை சேர்ந்தவர் பழனிவேல்(33). குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர். இவரை குடியிலிருந்து மீட்க குடும்பத்தினர் முடிவு செய்தனர். இதனையடுத்து, இவரை மேலூர் அருகே கல்லம்பட்டியில் உள்ள தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு சிகிச்சையிலிருந்த பழனிவேலுக்கு நேற்று முன்தினம் திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அவரை மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அவரது மனைவி புஷ்பவள்ளி கொடுத்த புகாரின் பேரில், சத்திரப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மறுவாழ்வு மையத்தில் வாலிபர் பரிதாப சாவு appeared first on Dinakaran.

Tags : Madurai ,Palanivel ,Keezatheru, ,Tiruparangunram, Madurai ,
× RELATED மதுரையில் பிடிஆர் பழனிவேல் ராஜன்...